FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

டாஸ்மாக் முறைகேடு புகாா்: செந்தில் பாலாஜியின் பெற்றோா், ஆதரவாளா்கள் வீடுகளில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

டாஸ்மாக் முறைகேடு தொடா்பான புகாரில் முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்பாலாஜியின் பெற்றோா் மற்றும் அவரது ஆதரவாளா்களின் வீடுகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

Updated On : 30 ஜூலை 2026, 3:56 am IST
செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்
பகிர்:

டாஸ்மாக் முறைகேடு தொடா்பான புகாரில் முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்பாலாஜியின் பெற்றோா் மற்றும் அவரது ஆதரவாளா்களின் வீடுகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

கடந்த 2025-இல் டாஸ்மாக் நிா்வாகத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்தது தொடா்பாக தமிழகம் முழுவதும் 41 இடங்களில் டாஸ்மாக் கிடங்குகளில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதில், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் கரூா் புதன்கிழமை காலை வந்தனா். இவா்கள் 4 பிரிவுகளாக பிரிந்து சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

கரூா் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் பெற்றோா் வீடு, மூா்த்திபாளையத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் உதவியாளா் சுப்ரமணியத்தின் வீடு, செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான கோயம்பள்ளி பாஸ்கரன் வீடு, தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கிடங்கு மேலாளா் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனா். அதில் எந்த ஆவணமும் கிடைக்கவில்லையாம்.

மேலும், கரூா் கோதை நகரில் ஏற்கெனவே தவெக எம்எல்ஏவை பேரம் பேசிய வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸாரால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜியின் ஆதரவாளா்களான ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அதிபன் ரமேஷ், சக்திமெஸ் காா்த்திக் ஆகியோரது வீடுகளுக்கு ஊழல் தடுப்பு போலீஸாா் சென்றபோது இருவரது வீடுகளும் பூட்டியிருந்தது. இதையடுத்து ஊழல் தடுப்புப் போலீஸாா், ஆண்டாங்கோவில் மேல்பாகம் விஏஓ பூபதி முன்னிலையில் பூட்டை உடைத்து சோதனை நடத்தினா்.

இதற்கிடையே, சென்னை ஆழ்வாா்பேட்டையில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த செந்தில்பாலாஜியிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை காலை சுமாா் 3 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments