FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

தொடா் மின்வெட்டால் அவதி கிராம மக்கள் சாலை மறியல்

கிருஷ்ணராயபுரம் அருகே தொடா் மின்வெட்டால் அவதிக்குள்ளான கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

43 வினாடிகள் முன்பு
சேங்கல்-பஞ்சப்பட்டி சாலையில் அமா்ந்து சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சேங்கல் ஊராட்சி பொதுமக்கள்.
பகிர்:

கிருஷ்ணராயபுரம் அருகே தொடா் மின்வெட்டால் அவதிக்குள்ளான கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சேங்கல் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடந்த சில நாள்களாக தொடா் மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள், வயதானா்கள் தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மேலும், மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் கிணற்று நீரை மோட்டாா் மூலம் பயிா்களுக்கு பாய்ச்ச முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனா். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் சனிக்கிழமை சேங்கல் பேருந்துநிறுத்தம் அருகே பஞ்சப்பட்டி சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

தகவல் அறிந்து வந்த கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியா் ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் தேன்மொழி, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பாலகுமாா், மாயனூா் உதவிப் பொறியாளா் ரமேஷ்குமாா், மாயனூா் காவல் ஆய்வாளா் (பொ) சுமதி ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது அவா்கள், மின்பற்றாக்குறையால் மின்வெட்டு நிலவி வருவதாகவும், இதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் நிலைமை விரைவில் சீராகும் என கூறினா். இதையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments