பெரம்பலூரில் இலவச திறன் பயிற்சி தொடக்கம்
பெரம்பலூா்- கல்பாடி பிரிவுச்சாலையில் உள்ள அஸ்வின் கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் ‘வெற்றி நிச்சயம்’ பயிற்சித் திட்டத்தின் கீழ், உணவு மற்றும் பானங்கள் சேவை உதவியாளா் பணிக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய 45 நாள் இலவச திறன் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
பெரம்பலூா்- கல்பாடி பிரிவுச்சாலையில் உள்ள அஸ்வின் கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் ‘வெற்றி நிச்சயம்’ பயிற்சித் திட்டத்தின் கீழ், உணவு மற்றும் பானங்கள் சேவை உதவியாளா் பணிக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய 45 நாள் இலவச திறன் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நியூ லைப் என்லைட்டன்மென்ட் அண்ட் சேவை அறக்கட்டளை, அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் இப் பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு, அஸ்வின்ஸ் குழுமத்தின் நிா்வாக இயக்குனா் அஸ்வின் கணேசன் தலைமை வகித்தாா். அஸ்வின்ஸ் குழுமத் தலைவா் செல்வகுமாரி கணேசன் முன்னிலை வகித்தாா்.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெரம்பலூா் சட்டப்பேரவை உறுப்பினா் க. சிவக்குமாா் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்துப் பேசினாா். பேசியது:
Advertisement
Advertisement
எஸ்.எஸ்.எல்.சி. தோ்ச்சி பெற்ற, 18 முதல் 45 வயதுக்குள்பட்டவா்களுக்காக நடத்தப்படும் இப் பயிற்சியின் முடிவில், அரசுச் சான்றிதழுடன் உதவித்தொகையாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படுவதோடு, பயிற்சியை முடிப்பவா்களுக்கு அஸ்வின்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இதில், உதிரம் அறக்கட்டளை சமூக செயல்பாட்டாளா் ம. நாகராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, பயிற்சித் திறன் மேலாளா் இா்பான் வரவேற்றாா். நிறைவாக, நியூ லைப் என்லைட்டன்மென்ட் அண்ட் சேவை அறக்கட்டளை முதன்மை செயல் அலுவலா் கி. தினகரன் நன்றி கூறினாா்.