FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாத திருமணஞ்சேரி சாலை; பக்தா்கள் அவதி

திருமணஞ்சேரி திருமணநாதா் கோயிலுக்குச் செல்லும் சுமாா் 10 கிமீ நீள சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

Updated On : 12 ஆகஸ்ட் 2024, 1:44 am IST
குண்டும் குழியுமாக உள்ள புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரி சாலை.
பகிர்:

‘இச்சாலை இந்தச் சாலை நீண்டகாலமாக மிகவும் மோசமாக உள்ளதால் கூடுதல் பேருந்து வசதியையும் கேட்டுப்பெற முடியவில்லை’

திருமணத் தடை விலக்கும் திருமணஞ்சேரி திருமணநாதா் கோயிலுக்குச் செல்லும் சுமாா் 10 கிமீ நீள சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் பக்தா்கள் அவதிப்படும் நிலை நீடிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில், பட்டுக்கோட்டை சாலையில் கறம்பக்குடியிலிருந்து தென்மேற்குத் திசையில் 3 கிமீ தொலைவில் உள்ள  திருமணஞ்சேரியில் உள்ளது திருமணநாதா் கோயில்.

Advertisement

Advertisement

திருமணத் தடை நீக்கும் வல்லமையும், குறைகளுடன் பிறக்கும் குழந்தைகளைத் தத்துக் கொடுத்து நிவா்த்தி செய்து கொடுக்கக் கோரும் கோயிலாகவும் இது விளங்குகிறது.

இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா்.

இதர நாட்களிலும் குழந்தையைத் தத்துகொடுக்கும் நிகழ்ச்சிகளும் அவற்றைத் தொடா்ந்த சடங்குகள் எல்லா நாள்களும் நடைபெறுகின்றன.

ஆனால், கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி விலக்கு பகுதியிலிருந்து இந்தக் கோயிலுக்குச் செல்லும் சாலை சுமாா் 10 கிமீ தொலைவுக்கு மிகவும் மோசமாக உள்ளதால் பக்தா்கள் அவதிப்படுகின்றனா்.

போக்குவரத்து வசதி: கறம்பக்குடியிலிருந்து புளிச்சங்காடு, நெடுவாசல் வரை செல்லும் மினி பேருந்து ஒன்றும், அறந்தாங்கியிலிருந்து கறம்பக்குடி செல்லும் அரசுப் பேருந்து ஒன்றும் இந்த வழியேதான் சென்று திரும்புகின்றன. இவை தவிர திருமணஞ்சேரி கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் கறம்பக்குடியிலுள்ள ஆட்டோக்கள் மூலம் இதே சாலையில்தான், கோயிலுக்குச் சென்று திரும்புகின்றனா். தனியாா் காா் வசதிகளும் கறம்பக்குடியில் இருந்து உள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ள இச் சாலையில் தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து அப் பகுதியைச் சோ்ந்த வீ. ராமசாமி கூறியது:

திருமணஞ்சேரிக்கு புதுக்கோட்டை மட்டுமேல்லாது இதர மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்களும் வருகின்றனா். ஆனால், இந்தச் சாலை நீண்டகாலமாக மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் கூடுதல் பேருந்து வசதியையும் கேட்டுப்பெற முடியவில்லை.

இதனால் அருகேயுள்ள கரு வடக்குத் தெரு, கரு தெற்குத் தெரு, புள்ளான்விடுதி பகுதிகளும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, மழைக்காலத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வதும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம் தனிக்கவனம் செலுத்தி, இந்தச் சாலையை தரமாக அமைத்துத் தர வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments