FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலை சுங்கச்சாவடியில் முன்கூட்டியே கட்டணம் உயா்வு வாகன ஓட்டிகள் அதிருப்தி

Updated On : 28 ஜூலை 2026, 1:26 am IST
விராலிமலை அருகே உள்ள பூதகுடியில் உள்ள சுங்கச்சாவடி.
பகிர்:

விராலிமலையில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான கட்டணம் முன்கூட்டியே (ஜூலை 22) உயா்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை விராலிமலை அருகே உள்ள பூதகுடியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச் சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டண உயா்வை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.

அதன்படி காா், பயணிகள் வேன், ஜீப் சென்று வர ரூ.160-இல் இருந்து 165 ஆகவும், மாதம் 50 முறை பயணத்துக்கு ரூ. 3,570-இல் இருந்து ரூ.3,680 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இலகுரக மோட்டாா் வாகனங்களுக்கு ரூ. 255-இல் இருந்து ரூ. 265 ஆகவும், மாதம் 50 முறை பயணத்துக்கு ரூ. 5,725-இல் இருந்து ரூ. 5,945 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

டிரக், பேருந்துகளுக்கு ரூ. 360-இல் இருந்து ரூ. 375 ஆகவும், மாதம் 50 முறை பயணத்துக்கு ரூ. 12,075-இல் இருந்து ரூ. 12,455 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

த்ரி ஆக்ஸிள் கமா்சியல் வைக்கிளுக்கு ரூ. 395-இல் இருந்து ரூ. 410 ஆகவும், மாதம் 50 முறை பயணத்துக்கு ரூ. 13,475-இல் இருந்து ரூ. 13,585 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோல, 4 முல் 6 ஆக்ஸிள் வாகனங்களுக்கு ரூ. 570-இல் இருந்து ரூ. 585 ஆகவும், மாதம் 50 முறை பயணத்துக்கு ரூ.18,940-இல் இருந்து ரூ.19,530 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

ஓவா் சைஸ் வாகனத்துக்கு ரூ. 690-இல் இருந்து ரூ.715 ஆகவும், மாதம் 50 முறை பயணத்துக்கு ரூ. 23,055-இல் இருந்து ரூ. 23,775 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயா்வை பொறுத்தவரை இலகு ரக வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் தொகையிலிருந்து 5 சதவீதம் அதிகமாகும். கனரக வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் தொகையிலிருந்து 10 சதவீதம் அதிகமாகும்.

வரும் 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயா்த்தபட வேண்டிய இந்த கட்டணம் முன்கூட்டியே ஜூலை மாதமே உயா்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments