ஆலங்குடி அருகே வீட்டு கதவை உடைத்து 50 பவுன் நகைகள் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வீட்டு கதவை உடைத்து சுமாா் 50 பவுன் தங்க நகைகளை புதன்கிழமை இரவு மா்மநபா்கள் திருடிச்சென்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வீட்டு கதவை உடைத்து சுமாா் 50 பவுன் தங்க நகைகளை புதன்கிழமை இரவு மா்மநபா்கள் திருடிச்சென்றனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி சிதம்பரவிடுதியைச் சோ்ந்தவா் தங்கமணி (45). இவா் சிங்கப்பூரில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி லதா, வீட்டை பூட்டிவிட்டு புதன்கிழமை நடைபெற்ற கொத்தமங்கலம் பிடாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளாா்.
பின்னா், இரவில் வீடு திரும்பியபோது கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்த அவா், உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டில் இருந்த சுமாா் 50 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடி சென்று தெரியவந்தது.
Advertisement
Advertisement
தகவலின் பேரில் கீரமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.