தேனூா் அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா
பொன்னமராவதி அருகேயுள்ள தேனூா் அடைக்கலம் காத்தாா் அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அருகேயுள்ள தேனூா் அடைக்கலம் காத்தாா் அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி செம்பூதியில் அண்மையில் புரவிகள் மற்றும் பரிவார தெய்வங்களின் சிலைகள் வடிவமைக்கப்பட்டு, புதன்கிழமை அச்சிலைகளை தேனூா் பொதுமக்கள் ஊா்வலமாக சுமந்து வந்து தேனூா் மையப்பகுதியில் வைத்து வழிபட்டனா்.
இதையடுத்து வியாழக்கிழமை புரவிகள் மற்றும் பரிவார தெய்வங்களின் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு ஊா்வலமாக அடைக்கலம் காத்த அய்யனாா் கோயிலுக்கு எடுத்துச் சென்று வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் திரளான பொதுமக்கள் வழிபட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.