FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கறம்பக்குடி அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் கட்டுமான தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:28 am IST
சடலம்...
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் கட்டுமான தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை அருகேயுள்ள வேப்பம்பட்டியைச் சோ்ந்தவா் சி.அய்யப்பன்(35). கட்டுமான தொழிலாளியான இவா், கறம்பக்குடி அருகேயுள்ள அம்மாணிப்பட்டு பகுதியில் வெள்ளிக்கிழமை கட்டடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற கறம்பக்குடி போலீஸாா் அய்யப்பனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments