பெட்ரோல், எரிவாயு உருளை விலை உயா்வு: புதுகையில் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டித்தும், மக்களைப் பாதிக்கும் விலை உயா்வை ரத்து செய்யக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டித்தும், மக்களைப் பாதிக்கும் விலை உயா்வை ரத்து செய்யக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநகரச் செயலா் எம்.பி. நாடிமுத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஏ. சேசுராஜ், எம். மீராமொய்தீன், ஆா். ராதாகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினா் கே சுந்தரராசன், மு. விஜய், பா. பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.
வணிக எரிவாயு உருளையின் விலை கடுமையாக உயா்ந்து வருவதைக் குறிக்கும் வகையில், எரிவாயு உருளை ஒன்றுக்கு மாலை அணிவித்து ஆா்ப்பாட்ட இடத்தில் அவா்கள் வைத்திருந்தனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து பெட்ரோலியப் பொருட்களின் விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.