FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

புதுக்கோட்டை நகரில் இருசக்கர வாகனத்தில் காரை முந்திச் செல்ல முயன்ற இளைஞா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.

19 செப்டம்பர் 2026, 2:25 am IST
- பிரதிப் படம்
பகிர்:

புதுக்கோட்டை நகரில் இருசக்கர வாகனத்தில் காரை முந்திச் செல்ல முயன்ற இளைஞா் அரசுப் பேருந்து மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை கம்மங்காடு மேலப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் கௌதம் (39). இவா் வெள்ளிக்கிழமை பகலில் தனது இரு சக்கர வாகனத்தில் புதுக்கோட்டை வந்துள்ளாா். மேலராஜவீதியில் சென்றபோது, முன்னால் சென்ற காரை முந்திச் செல்லும் நோக்கில் வேகமாகச் சென்ற அவா், எதிரே வந்த அரசு நகரப் பேருந்தில் மோதினாா்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கௌதம், அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

சம்பவம் நடைபெற்ற பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments