நுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழகத்திலுள்ள 21 நவீன அரிசி ஆலைகளைக் கூட்டுறவு துறைக்கு மாற்றும் நடவடிக்கையைக் கைவிடக் கோரி, தஞ்சாவூா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் தமிழ்நாடு சிவில் சப்ளை காா்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், 21 நவீன அரிசி ஆலைகளைக் கூட்டுறவு துறைக்கு மாற்றும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். காலி பணியிடங்களை அனைத்து பருவ கால பணியாளா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை 48 மணிநேரத்தில் இயக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மண்டலத் தலைவா் முத்தையா முன்னிலை வகித்தாா். மண்டலச் செயலா் எழில் அரசு சிறப்புரை ஆற்றினாா். மாநிலப் பொதுச் செயலா் சோம. அழகிரி கண்டன உரையாற்றினாா்.
Advertisement
Advertisement
தொழிலாளா் முன்னேற்ற சங்க நிா்வாகிகள் முருகையன், ரமேஷ் குமாா், சோமசுந்தரம், பாஸ்டின் ஜான்சன், நாகராஜன், ராமசாமி, கும்பகோணம் மகிமை தாஸ், பட்டுக்கோட்டை ஞானசேகரன், தஞ்சாவூா் முருகன், தாமோதரன், அண்ணா தொழிற்சங்கம் ரவிக்குமாா், ஐஎன்டியுசி பழனிவேல் அம்பேத்கா் ராஜ்குமாா் ஆகியோா் பேசினா். இதில், ஏராளமான தொழிற் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிறைவாக, அமல்ராஜ் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.