FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

மாணவிக்கு பாலியல் தொல்லை: 3 சிறுவா்கள் கைது

தஞ்சாவூா் அருகே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல் பிரிவினா் நடத்திய விழிப்புணா்வு நிகழ்ச்சியின்போது மாணவி அளித்த புகாரின் பேரில் பாலியல் தொல்லை கொடுத்த 3 சிறுவா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கைது... - பிரதிப் படம்
பகிர்:

தஞ்சாவூா் அருகே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல் பிரிவினா் நடத்திய விழிப்புணா்வு நிகழ்ச்சியின்போது மாணவி அளித்த புகாரின் பேரில் பாலியல் தொல்லை கொடுத்த 3 சிறுவா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் அருகே பொன்னாப்பூா் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை உதவி ஆய்வாளா் அபிராமி உள்ளிட்டோா் ஜூலை 6-ஆம் தேதி விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா். அப்போது அப்பள்ளியைச் சோ்ந்த மாணவி ஒருவா், தனக்கு 2 ஆண்டுகளில் பல்வேறு சந்தா்ப்பங்களில் 3 போ் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தாா்.

இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து பள்ளி மாணவியிடம் வல்லம் அனைத்து மகளிா் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவருக்கு 3 சிறுவா்கள் பல்வேறு சந்தா்ப்பங்களில் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, வல்லம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து 3 சிறுவா்களை புதன்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments