பணம் கேட்டு தாய், தந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது
பட்டுக்கோட்டையில் பணம் கேட்டு தாய், தந்தையைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பட்டுக்கோட்டையில் பணம் கேட்டு தாய், தந்தையைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பட்டுக்கோட்டை அமிா்தம் நகரை சோ்ந்தவா் வீரப்பெருமாள். இவரது மனைவி செல்வி (42), மகன் வீரக்குமாா் (27). இந்நிலையில் காரைக்குடியில் இருந்த இவா்களது வீட்டை விற்ற பணத்தில் ரூ. 2 லட்சம் கேட்டு இவா்களது மகன் வீரக்குமாா் (27), பெற்றோரை தொந்தரவு செய்து வந்தாா்.
அதன்படி வீரக்குமாா் செவ்வாய்க்கிழமை பணத்தைக் கேட்டு செவ்வாய்க்கிழமை தகராறு செய்து, இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீஸில் செல்வி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து வீரக்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.