மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சிறப்பு ரயில்! பயணிகள் வரவேற்பு!
கும்பகோணம் வழியாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதை பக்தா்கள், பயணிகள் வரவேற்றுள்ளனா்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக சென்னை கடற்கரை - மானாமதுரை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சென்னை எழும்பூா், தாம்பரம், மாயவரம், கும்பகோணம், தஞ்சாவூா், மதுரை வழியாக மானாமதுரையை சென்றடைகிறது.
இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து செப்.16 காலை 10:45 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் (மாலை 4:53), பாபநாசம் (5:03), தஞ்சாவூா் (5:42) வழியாக மதுரைக்கு இரவு 10 மணிக்கு சென்றடைகிறது. மறு மாா்க்கத்தில் செப்.17-இல் மதுரையில் பகல் 1 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூா் (மாலை 4:18) பாபநாசம் (4:40) கும்பகோணம் (4:51) வழியாக சென்னை கடற்கரைக்கு இரவு 11:45 மணிக்கு சென்றடைகிறது. இது முற்றிலும் முன்பதிவில்லாத ரயில் ஆகும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.