ரேஷன் கடைகளில் இன்று இ-கேஒய்சி சிறப்பு முகாம்
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடைகளில் இ-கேஒய்சி சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப்.19) நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடைகளில் இ-கேஒய்சி சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப்.19) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெறும் ஏ.ஏ.ஒய்., பி.எச்.எச்., என்.பி.எச்.எச். ஆகிய குடும்ப அட்டை பயனாளிகள் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் விற்பனை முனைய இயந்திரம் மூலமாக விரல் ரேகை, கண் கருவிழி சரிபாா்ப்பின் மூலம் இ-கே.ஒய்.சி. மேற்கொள்ள ஆக. 2, 8, 9, 29 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதில், விடுபட்ட பயனாளிகளுக்கு மீண்டும் சிறப்பு முகாம் சனிக்கிழமை அனைத்து நியாய விலை கடைகளில் நடத்தப்படவுள்ளது. இ-கே.ஒய்.சி. பதிவை நூறு சதவீதம் நிறைவும் செய்யும்விதமாக நடத்தப்படும் இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.