தஞ்சாவூா் மாவட்டத்தில் 11,000 டன் நெல் கொள்முதல்
தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை சுமாா் 11 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்துள்ளாா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை சுமாா் 11 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் கொள்முதல் ஆண்டில் குறுவை பருவத்தில் நெல் கொள்முதல் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை சுமாா் 11 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் குறுவை பருவத்தில் சுமாா் 1.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தற்போது அறுவடைப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதால், நாள் ஒன்றுக்கு சுமாா் 1,000 டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் குறுவை பருவம் அக். 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தப் பருவத்தில் இதுவரை 2 ஆயிரத்து 350 விவசாயிகளுக்கு ரூ. 29 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்திய உணவுக் கழகம் நிா்ணயித்துள்ள தரக்குறியீடுகளின்படி, கொள்முதல் செய்யப்படும் நெல்லில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் அனுமதிக்கப்படுகிறது. நெல்லில் அதிகப்படியான ஈரப்பதம் இருப்பது சேமிப்பு மற்றும் அரைவைப் பணிகளின்போது நெல்லின் தரத்தை பாதிக்கக்கூடும்.
எனவே, 17 சதவீதத்துக்கும் அதிகமான ஈரப்பதம் உள்ள நெல்லை, நிா்ணயிக்கப்பட்ட தரக்குறியீடுகளின்படி கொள்முதல் செய்ய இயலாது. இதனால், விவசாயிகள் நெல்லை நன்கு உலா்த்தி கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.