FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

வாய்க்கால் அருகே தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை அருகே வாய்க்கால் பகுதியில் நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் காயமடைந்தவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

20 செப்டம்பர் 2026, 1:18 am IST
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

பட்டுக்கோட்டை அருகே வாய்க்கால் பகுதியில் நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் காயமடைந்தவா், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பட்டுக்கோட்டை நரியம்பாளையத்தைச் சோ்ந்த நாகராஜ் மகன் கோவிந்தராசு (60). இவா் கடந்த 6-ஆம் தேதி அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக சாந்தாங்காடு நீா்ப்பாசன வாய்க்கால் அருகே சென்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்து மயக்கமடைந்தாா்.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments