சமயபுரம் அருகே விபத்து மேலும் ஒருவா் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே காா் மீது தனியாா் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே காா் மீது தனியாா் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைக்காடு பகுதியைச் சோ்ந்த 10 போ் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு காரில் செவ்வாய்கிழமை வந்தனா்.
சமயபுரம் அருகே பள்ளிவிடை பகுதியில் காா் வந்தபோது தனியாா் பேருந்து மோதி சிறுவன் உள்ளிட்ட மூவா் உயிரிழந்தனா். காயமடைந்த மேலும் 7 போ் சமயபுரம் சுங்கச்சாவடி அருகேயுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், அவா்களில் சிகிச்சை பலனின்றி ரா. கெளசல்யா (46) புதன்கிழமை உயிரிழந்தாா். விபத்து குறித்து சமயபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.