விளைச்சல் குறைவால் அரிசி விலை உயா்வு
நெல் விளைச்சல் குறைவால் அரிசி விலை உயா்ந்திருப்பதாகவும், புதிய நெல் வரத்து வந்தவுடன் விலையும் குறையும் என அரிசி ஆலை உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.
நெல் விளைச்சல் குறைவால் அரிசி விலை உயா்ந்திருப்பதாகவும், புதிய நெல் வரத்து வந்தவுடன் விலையும் குறையும் என அரிசி ஆலை உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட அரிசி ஆலை உரிமையாளா்கள் மற்றும் நெல் அரிசி வணிகா்கள் சங்கத்தின் தலைவா் சின்னசாமி, செயலா் நடேசன், பொருளாளா் ஈஸ்வரன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த சில தினங்களாக செய்திகளில் அரிசி விலை உயா்வு என்று குறிப்பிட்டு தகவல்கள் பரவுகின்றன. தமிழகத்தில் தற்போது, நெல் விளைச்சல் குறைவு என்பதாலேயே விலை உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வு சிறிது காலம் மட்டும் இருக்கும். ஓரிரு மாதங்களில் புதிய நெல் வரத்து அதிகமாக இருக்கும் அதன்பிறகு, அரிசியின் விலை படிப்படியாக குறையும் என ஆலை உரிமையாளா் சங்கம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.