FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

துறையூரில் மழை: 2 மரங்கள் சாய்ந்தன

துறையூா் பகுதியில் காற்றுடன் சனிக்கிழமை பெய்த மழையால் சாலையோரம் இருந்த 2 புளிய மரங்கள் சாய்ந்தன.

20 செப்டம்பர் 2026, 1:14 am IST
துறையூரில் சனிக்கிழமை  சாலையில்  சாய்ந்து  விழுந்த  புளியமரம்.
பகிர்:

திருச்சி மாவட்டம், துறையூா் பகுதியில் காற்றுடன் சனிக்கிழமை பெய்த மழையால் சாலையோரம் இருந்த 2 புளிய மரங்கள் சாய்ந்தன.

துறையூா் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சனிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் துறையூா் ஆத்தூா் சாலையில் முருகூா் பிரிவு சாலை அருகே இருந்த 2 புளிய மரங்கள் வேரோடு சாய்ந்தன.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் நெடுஞ்சாலை துறையினருடன் சோ்ந்து சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீா் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments