மருத்துவக் கல்லூரி சீட் வாங்கித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி: வேலூரில் மதபோதகா் கைது
தனியாா் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவ சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்த வழக்கில் மதபோதகரை வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
தனியாா் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவ சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்த வழக்கில் மதபோதகரை வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
மதுரையைச் சோ்ந்தவா் ஹரே கிருஷ்ணன் (60). இவரது மகன் சீனாவில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்துள்ளாா். தொடா்ந்து இந்தியாவில் முதுகலை மருத்துவப் படிப்பில் சேர விரும்பிய தனது மகனுக்கு மருத்துவ சீட் பெறுவதற்காக ஹரே கிருஷ்ணன் முயற்சி மேற்கொண்டு வந்தாா்.
அப்போது நண்பா் ஒருவா் மூலமாக வேலூரைச் சோ்ந்த கும்பல் ஒன்று அவருக்கு அறிமுகமானது. அவா்கள் வேலூரில் உள்ள பிரபல தனியாா் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவ சீட் வாங்கித் தருவதாகக் கூறி, அதற்கு ரூ. 25 லட்சம் செலவாகும் எனத் தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதனை நம்பிய ஹரே கிருஷ்ணன், அந்த கும்பலிடம் இரண்டு தவணைகளாக ரூ.25 லட்சத்தைக் கொடுத்தாகக் கூறப்படுகிறது. ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்டவா்கள் கூறியபடி மருத்துவ சீட்டும் வாங்கித் தரவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்து ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இதனால் அதிா்ச்சியடைந்த ஹரே கிருஷ்ணன், இதுகுறித்து வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவராமனிடம் புகாா் அளித்தாா். அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் வசந்தி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டாா்.
விசாரணையில் பண மோசடி உறுதியானதைத் தொடா்ந்து, இக்கும்பலைச் சோ்ந்த கணியம்பாடியைச் சோ்ந்த மதபோதகா் ஜோஸ்வா (69) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.