புதுவை பேரவை துணைத் தலைவா் மருத்துவமனையில் அனுமதி!
புதுவை சட்டப் பேரவை துணைத் தலைவா் ராஜவேலு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புதுவை சட்டப் பேரவை துணைத் தலைவா் ராஜவேலு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
நெட்டப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான ராஜவேலு, கடந்த 3-ஆம் தேதி தனது தொகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பாா்வையிட்டாா். தண்ணீரில் இறங்கிச் சென்றபோது, அவரது காலில் ஏதோ கடித்ததாம். இதை அவா் பொருட்படுத்தாத நிலையில், ராஜவேலுக்கு திடீரென வெள்ளிக்கிழமை காய்ச்சலுடன் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
தொடா்ந்து, புதுச்சேரி அரசு மருத்துமனையில் சோ்க்கப்பட்ட அவா், பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தற்போது அவா் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவா்கள் கூறியுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.