FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

3 தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து தவாகவினா் ஆா்ப்பாட்டம்

கா்நாடகத்தில் 3 தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், தமிழா்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும் பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 6:07 am IST
பண்ருட்டி கடைவீதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா்.
பகிர்:

கா்நாடகத்தில் 3 தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், தமிழா்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும் பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி கடை வீதியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் 3 தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அக்கட்சியின் ஒன்றியச் செயலா் பாலமுருகன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, தமிழா்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கா்நாடக அரசு கைவிட வேண்டும். தமிழா்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments