தமிழ்நாடு நாள் விழா போட்டிகள்: வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்
தமிழ்நாடு நாள் விழாவையொட்டி, கடலூா் மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
தமிழ்நாடு நாள் விழாவையொட்டி, கடலூா் மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆண்டுதோறும் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, கடலூா் மாவட்டத்தில் மஞ்சக்குப்பம் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றன. இதில், முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
இதையொட்டி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சுப்புலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.