என்எல்சி சுரங்க வாயிலில் தொழிலாளா்கள் போராட்டம்
என்எல்சி 2-ஆவது சுரங்க வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள்.
பணி உத்திரவாதம் தரக்கோரி, நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க நுழைவு வாயில் முன்பு வேலையைபுறக்கணித்து ஒப்பந்தத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.
நெய்வேலி, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ஆவது சுரங்கத்தில், ராட்சத இயந்திரங்கள் பராமரிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள்கடந்த 6 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு செப். 30-ஆம் தேதி உடன் ஒப்பந்தம் முடிவடைவதால், என்எல்சி இந்தியா நிா்வாகம் ஒப்பந்தத் தொழிலாளா்களை, நிறுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு, வேலையில் இருந்து நிறுத்தினால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி, ஒப்பந்தத் தொழிலாளா்கள் சுமாா் 68 போ், பணிக்கு செல்லாமல், பணிப் புறக்கணிப்பு செய்து, 2-ஆவது சுரங்க நுழைவு வாயில் முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, என்எல்சி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தியதை அடுத்து அவா்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்துச் சென்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.