FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

15 செப்டம்பர் 2026, 1:14 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திட்டக்குடி வட்டம், பாசா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வமணி(53). இவரது, இரண்டு மகன்களில் ஒருவா் வெளிநாட்டிலும், மற்றொருவா் சென்னையிலும் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், செல்வமணி ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு, ஆத்தூரில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றாா். திங்கள்கிழமை வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக அருகிலிருந்தோா் கைப்பேசி மூலம் அவருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வீடு திரும்பிய செல்வமணி, உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் இருந்த 13.5 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடு போயிருந்தது அவருக்கு தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து செல்வமணி அளித்த புகாரின் பேரில் வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி மா்மநபரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments