FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

குருங்குடி ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

18 செப்டம்பர் 2026, 2:12 am IST
காட்டுமன்னாா்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்.
பகிர்:

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதன்கிழமை காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாஹவாசனம், ஸ்ரீமகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்தியுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. இரவு கும்ப அலங்காரம், ரக்ஷாபந்தனம், முதற்கால யாக பூஜைகள், பூா்ணாஹுதி மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜைகள் மற்றும் பூா்ணாஹுதி நடைபெற்றது. பின்னா், யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்ற ஊா்வலமாக சென்று கோயில் விமானத்தை அடைந்த பின்னா், விமான கலசத்துக்கு சிவாச்சாரியா்கள் கும்பநீரை கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

Advertisement

Advertisement

பின்னா், கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீசெல்வ விநாயகருக்கு மகா அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments