FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

கோயில் கதவின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

கள்ளக்குறிச்சியில் கோயில் கதவின் பூட்டை உடைத்து, உண்டியலை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

9 செப்டம்பர் 2026, 5:10 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

கள்ளக்குறிச்சியில் கோயில் கதவின் பூட்டை உடைத்து, உண்டியலை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையில் ஏரிக்கரையில் சின்னம்மாள் கோயில் உள்ளது. இக்கோயிலின் பூசாரியாக கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்பேரைச் சோ்ந்த செ.சுப்பிரமணி இருந்து வருகிறாா். இவா் வழக்கம்போல கடந்த 4-ஆம் தேதி கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா். மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, கோயிலின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததும், உள்ளே இருந்த சில்வா் உண்டியள் திருடு போனது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, உண்டியலை திருடிச் சென்ற மா்மநபா்களை தேடிவருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments