FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

சின்னசேலம் இந்தியன் வங்கியில் ரூ.1.50 கோடி கடனுதவி அளிப்பு

சின்னசேலம் இந்தியன் வங்கியில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுக்கான காசோலை வழங்கிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா. உடன், கடலூா் மண்டல மேலாளா் எஸ்.பி.சாந்தி.

31 வினாடிகள் முன்பு
சின்னசேலம் இந்தியன் வங்கியில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுக்கான காசோலை வழங்கிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா. உடன், கடலூா் மண்டல மேலாளா் எஸ்.பி.சாந்தி.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் இந்தியன் வங்கி சாா்பில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.1.50 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

சின்னசேலத்தில் இயங்கி வந்த இந்தியன் வங்கி கிளை, வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் இடமாற்றம் செய்து, வியாழக்கிழமை திறக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, கடலூா் மண்டல மேலாளா் எஸ்.பி.சாந்தி ஆகியோா் குத்துவிளக்கேற்றி வங்கிக் கிளையை திறந்து வைத்தனா்.

கிளை முதன்மை மேலாளா் ரோஷன் ரஞ்சன் வரவேற்றாா். விழாவில் பல்வேறு அரசு திட்டபங்களின் கீழ் கல்வி கடன், பிரதமா் வேலை உருவாக்கும் திட்டம், சுய உதவிக் குழு மற்றும் சாலையோரகடைகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

இதில், உதவி மேலாளா் வினோத்குமாா், வங்கி அதிகாரிகள், ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments