FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

நடத்துநா் தூக்கிட்டுத் தற்கொலை

22 வினாடிகள் முன்பு
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே அரசுப் பேருந்து தற்காலிக நடத்துநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட செல்லங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ர.பரத்குமாா் (29). இவா் மணம்பூண்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து வீட்டுக்கு வந்த பரத்குமாா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் கம்யில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். தகவலறிந்த மணலூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments