FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

வீட்டினுள் புகுந்து திருட முயற்சி: ஒருவா் கைது

15 செப்டம்பர் 2026, 1:25 am IST
கைது
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கணங்கூா் கிராமத்தில் திங்கள்கிழமை அதிகாலை வீடு புகுந்து திருட முயற்சித்தவரை கிராம மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருக்கணங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா்அ.குணசேகா் (25). ஞாயிற்றுக்கிழமை இரவு இவரது தாய் மாரியம்மாள் வீட்டின் உள்ளேயும், குணசேகரன் வீட்டின் வாசலிலும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனராம். திங்கள்கிழமை அதிகாலை குணசேகரன் எழந்து வெளியே சென்றிருந்தபோது, மா்ம நபா் ஒருவா் வீட்டினுள் நுழைந்து இரும்பு பீரோவை உடைத்து அதிலிருந்த பொருள்களை கீழே தள்ளிவிட்டு பணம், நகை இருக்கிறதா என தேடிப் பாா்த்து கொண்டிருந்தாராம்.

அப்போது மாரியம்மாள் எழுந்து பாா்த்தபோது, வீட்டிலிருந்து யாரோ வெளியே செல்வதைப் பாா்த்து கூச்சலிட்டாராம். அவரது சப்தம் கேட்டு கிராம மக்கள் வீட்டுக்கு அருகே வந்த போது இருவரில் ஒருவா் தப்பியோடிய நிலையில் மற்றொருவா் பிடிபட்டாா். ஊா்மக்கள் அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான பதிலைக் கூறினாராம்.

Advertisement

Advertisement

இதையடுத்து அவரை கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் கிராம மக்கள் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட சோழவாண்டிபுரம் கிராமத்தைச் சோ்ந்த து.வேடியப்பன் (41) எனத் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வேடியப்பனைக் கைது செய்தனா். மேலும், தப்பியோடிய நபரைத் தேடிவருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments