FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி வானொலி நிலையத்தை மூடக் கூடாது: புதுவைத் தமிழ்ச் சங்கம் வலியுறுத்தல்

புதுச்சேரி வானொலி நிலையத்தை மூடக் கூடாது என புதுவைத் தமிழ்ச் சங்கம் வலியுறுத்தியது.

Updated On : 1 அக்டோபர் 2021, 12:00 am IST
பகிர்:

புதுச்சேரி வானொலி நிலையத்தை மூடக் கூடாது என புதுவைத் தமிழ்ச் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் வி.முத்து வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் 1967-இல் தொடங்கப்பட்ட வானொலி நிலையம், புதுச்சேரி மட்டுமன்றி தமிழகத்தின் கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கும் பயன்படும் வகையில் கலை, கல்வி, பண்பாடு, சமூகம், மருத்துவம், வேளாண்மை, பொருளாதாரம், தொழில், விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்தி, சிறந்த நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது.

புதுச்சேரியின் தனித்தன்மைகளைக் காப்பது போல, தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு ஆகிய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் நிகழ்ச்சிகள் தயாரித்து அளிக்கப்படுகின்றன. கதை, கட்டுரை, கவிதை, நாடகம், திறனாய்வு ஆகிய அனைத்துப் படைப்புகளையும், படைப்பாளா்களையும் ஊக்குவிக்கிறது.

Advertisement

Advertisement

இவ்வாறு அனைத்து வகைகளிலும் மக்களைச் சாா்ந்து, அவா்களுக்குப் பயன் தரும் நிகழ்ச்சிகளை வழங்கி வரும் புதுச்சேரி வானொலி நிலையத்தை மூடப் போவதாகச் செய்திகள் வருகின்றன. மத்திய அரசு வானொலி நிலையத்தை முடக்கும் செயலை மறுபரிசீலனை செய்து, தொடா்ந்து இயங்கச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments