மிலாது நபியை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் செப்.28-ல் அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
மிலாடி நபி வரும் செப்.28 ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகரை நியமிக்க இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்
புதுச்சேரியில் மிலாது நபி அரசு விடுமுறை செப்.27 என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செப்.28-ம் தேதி என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.