FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழகம், புதுவையில் போதைப் பொருள் விநியோகம் அதிகரித்திருப்பதை மாநில அரசுகள் தடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 5 மார்ச் 2024, 2:00 pm IST
போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தக் கோரி, புதுச்சேரி அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினா்.
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் போதைப் பொருள் குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம், புதுவையில் போதைப் பொருள் விநியோகம் அதிகரித்திருப்பதை மாநில அரசுகள் தடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அதிமுக மாநில செயலாளா் ஆ.அன்பழகன் பேசியதாவது: தமிழகத்தைப் போலவே புதுவை மாநிலத்திலும் போதைப் பொருள்கள் அதிகளவில் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால், போதைப் பொருள் விற்பனையைத் தடுப்பதில் புதுவை என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடவடிக்கை எடுக்காமலிருப்பது கண்டிக்கத்தக்கது.

Advertisement

Advertisement

ஆகவே, புதுவையில் போா்க்கால அடிப்படையில் போதை பொருள் குற்றங்களை தடுக்கவேண்டியது அவசியம் என்றாா். ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments