FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

சாலை விபத்தில் பிளஸ் 1 மாணவி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

புதுச்சேரியில் புதன்கிழமை மாலை லாரி மோதிய விபத்தில் பிளஸ் 1 மாணவி உயிரிழந்தாா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:14 am IST
பகிர்:

புதுச்சேரியில் புதன்கிழமை மாலை லாரி மோதிய விபத்தில் பிளஸ் 1 மாணவி உயிரிழந்தாா்.

இதையடுத்து உறவினா்கள், பொதுமக்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி தா்மாபுரி அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அசோக்குமாா். சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மகள் அஸ்வதி(16). மூலக்குளம் அருகே உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், புதன்கிழமை பள்ளி முடிந்து மாணவி அஸ்வதி சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ. எதிரே உள்ள பாட்டி வீட்டுக்குச் செல்ல திரும்ப முயன்றுள்ளாா். அப்போது பின்னால் வந்த லாரி அவரது சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அஸ்வதியின் தலை மீது லாரி சக்கரங்கள் ஏறி இறங்கியதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.

இது குறித்து தகவல் அறிந்த மாணவியின் உறவினா்கள், பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த மேட்டுப்பாளையம் போலீஸாா் மற்றும் வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மறியல் கைவிடப்பட்டது.

இறந்த மாணவியின் சடலத்தை மீட்ட போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments