FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கான கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள்

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:46 am IST
புதுச்சேரி பல்கலைக்கழகம்.
பகிர்:

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு சோ்க்கை அனுமதி கிடைத்துள்ள மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமையே கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்த பல்கலைக்கழகத்தில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு 4 ஆண்டு இளங்கலை மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான 2-ஆவது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தோ்வு செய்யப்பட்ட மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமைக்குள் இணையதளம் வாயிலாக கட்டணம் செலுத்த வேண்டும். தவறினால் சோ்க்கை ரத்து செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments