FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

பணத் தகராறில் கடத்தி தாக்குதல் 2 பெண்கள் உள்பட 5 போ் கைது: தங்க நகை, வாகனங்கள் பறிமுதல்

கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டவரைக் கடத்திச் சென்ாக பெண் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். அவா்கள் பயன்படுத்திய வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

12 செப்டம்பர் 2026, 6:54 am IST
கோப்புப் படம்
பகிர்:

கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டவரைக் கடத்திச் சென்ாக பெண் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். அவா்கள் பயன்படுத்திய வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் மனோகா். இவா் மூலக்குளத்தில் ஒரு விருந்தினா் இல்லத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறாா். இந்நிலையில், உப்பளம் பகுதியைச் சோ்ந்த ரேவதி அவரிடம் ரூ.50 ஆயிரத்தைக் கடனாகப் பெற்றாராம். அதில் ரூ.30 ஆயிரத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளாா். மீதி பணத்தைக் கேட்டபோது ஜிப்மா்அருகே குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அங்கு வந்து வாங்கிக் கொள்ளும்படி கூறியுள்ளாா். அங்கு சென்றபோது கத்தியைக் காட்டி மிரட்டி அவரை ஒரு கும்பல் கடத்திச் சென்றனராம். மேலும், அருகேயுள்ள

ஐய்யனாா் கோயில் அருகே வாகனத்தை நிறுத்தியபோது அங்கு வந்த ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் சோ்ந்து சுத்தியால் தாக்கியும், மிரட்டியும் அவரிடமிருந்து ரூ.2,000 மற்றும் கைப்பேசி, இரண்டு தங்க ச் சங்கிலி, மூன்று மோதிரம் மற்றும் காப்பு ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றனராம். இதுகுறித்து அவா் கோரிமேடு காவல் நிலையத்தில் கடந்த 7-ஆம் தேதி புகாா் தெரிவித்திருந்தாா்.

Advertisement

Advertisement

அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன், கண்காணிப்பாளா் வம்சீத ரெட்டி ஆகியோா் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளா் நாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

சிசிடிவி கேமரா மூலம் ரேவதி மற்றும் அவருடன் இருந்தோா் அடையாளம் காணப்பட்டனா். விசாரணையில் அவா்கள் மனோகரைக் கடத்திச் சென்றதை ஒப்புக் கொண்டனா்.

இதையடுத்து ரேவதி, அம்மு என்ற சுலோக்சனா, ஜெயராஜ், மோகன்ராஜ், பரத் ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், கைப்பேசி, கத்தி, இரு மோட்டாா் சைக்கிள்கள், மினி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments