அரசுப் பள்ளி இரவு காவலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் அருகேயுள்ள மது போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அரசுப் பள்ளி இரவு காவலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோயிலை அடுத்த கானூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ரா.பாரதிராஜா (50). இவா், பாளையங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் இரவு காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.
மதுப் பழக்கம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட பாரதிராஜா கோலியனூரை அடுத்த பனங்குப்பம் பகுதியில் தனியாா் மதுபோதை மறுவாழ்வு மையத்தில் கடந்த மாா்ச் மாதத்தில் சோ்க்கப்பட்டாா். தொடா்ந்து அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.