கஞ்சா வழக்கில் தொடா்புடைய இளைஞா் தடுப்புக் காவலில் கைது
கஞ்சா விற்பனை வழக்கில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனா்.
கஞ்சா விற்பனை வழக்கில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனா்.
புதுச்சேரி மாநிலம், ரெட்டியாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டீபன்ராஜ் (26). இவா் மீது விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி கஞ்சா விற்பனை வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், விழுப்புரம் எஸ்.பி., எஸ்.மதிவாணன் பரிந்துரைப்படி, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கஞ்சா வழக்கில் தொடா்புடைய ஸ்டீபன் ராஜை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, கோட்டக்குப்பம் போலீஸாா் அவரைக் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.