வியாபாரி விஷம் குடித்துத் தற்கொலை
விழுப்புரம், செப். 14: விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வியாபாரி விஷமருந்தித் தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டிவனம் வட்டம், பாதிராபுலியூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் த.முருகேசன்(48). இவா், தனது சரக்கு வாகனத்தில் ஊா், ஊராகச் சென்று காய்கனிகள் வியாபாரம் செய்து வந்தாா். தொழில் நஷ்டத்தால் முருகேசன் அவதிப்பட்டு வந்தாராம்.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த இவா் செப்.12-ஆம் தேதி பாதிராபுலியூரில் உள்ள குடியிருப்பு பகுதியில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்து வந்த முருகேசன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.