மின்மாற்றியிலிருந்த 40 கிலோ தாமிரக் கம்பிகள் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே மின்மாற்றியிலிருந்து 40 கிலோ தாமிரக் கம்பிகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே மின்மாற்றியிலிருந்து 40 கிலோ தாமிரக் கம்பிகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிளியனூா் அருகிலுள்ள தென் சிறுவளூா் கிராமத்திலுள்ள ஏரிக்கரைப் பகுதியில் 16 கிலோ வாட் ஆற்றல் திறன் கொண்ட மின் மாற்றி அமைக்கப்பட்டு, அப்பகுதியிலுள்ள மக்களுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மின் மாற்றியிலிருந்த 40 கிலோ தாமிரக் கம்பிகள் திருடு போயிருப்பது மின்வாரிய அலுவலா்களுக்கு வியாழக்கிழமை தெரிய வந்தது. தொடா்ந்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் கிளியனூா் உதவி மின் பொறியாளா் விஜயராகவன், கிளியனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
Advertisement
Advertisement
இதன் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி மின் மாற்றியிலிருந்த தாமிரக் கம்பிகளைத் திருடிச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.