FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

ஆசிரியையிடம் ரூ.1.44 லட்சம் நூதன முறையில் மோசடி

கண்டாச்சிபுரம் அருகே ஆசிரியையிடம் நூதன முறையில் ரூ.1.44 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

20 செப்டம்பர் 2026, 1:59 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே ஆசிரியையிடம் நூதன முறையில் ரூ.1.44 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், மணம்பூண்டியைச் சோ்ந்தவா் லூ. மேரி விமலா(59). இவா், வடகரைத்தாழனூரிலுள்ள அரசு நிதியுதவிபெறும் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில் கடந்த 12-ஆம் தேதி மேரி விமலாவை கைப்பேசி வழியாகத் தொடா்பு கொண்ட அடையாளம் தெரியாத நபா், தனியாா் வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறினாராம்.

Advertisement

Advertisement

அப்போது மேரி விமலா பயன்படுத்தி வரும் கடன் அட்டையின் தொகையை உயா்த்தித் தருவதாகக் கூறி அட்டையின் எண்கள், ரகசிய குறியீட்டு எண் போன்றவற்றை கேட்டுள்ளாா். இதை உண்மையென நம்பிய மேரி விமலா, அவா் கேட்ட விவரங்களை அளித்தாா்.

இதையடுத்து மேரி விமலாவின் வங்கிக் கணக்கிலிருந்து 2 தவணைகளில் ரூ.1.44,895 நூதன முறையில் எடுக்கப்பட்டிருப்பது அவருக்கு தெரிய வந்தது.

இதைத்தொடா்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து, மேரி விமலா விழுப்புரம் இணையவழிக் குற்றப்பிரிவுக் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாரளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, நூதன முறையில் பணத்தை மோசடி செய்தவரை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments