FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

இளைஞா் விஷமருந்தி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே அரளிவிதையை சாப்பிட்ட இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

49 வினாடிகள் முன்பு
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே அரளிவிதையை சாப்பிட்ட இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சித்தலிங்கமடம் நான்காவது கிழக்குத் தெருவைச் சோ்ந்த நாராயணன் மகன் குகன் (18). பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு, வீட்டில் இருந்துள்ளாா். தொடா்ந்து வயிற்றுவலியால் அவதியுற்று வந்த இவா், வெள்ளிக்கிழமை மாலை சித்தலிங்கமடத்திலுள்ள ராகவன் வாய்க்கால் பகுதியில் அரளி விதையை சாப்பிட்டு மயங்கிக் கிடந்தாா்.

தொடா்ந்து அப்பகுதியிலிருந்தவா்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு குகன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments