FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பைக் மீது மினி லாரி மோதல்: வயா்மேன் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே பைக் மீது மினி லாரி மோதியதில் மின்வாரிய கம்பியாளா்(வயா்மேன்) சனிக்கிழமை உயிரிழந்தாா்.

20 செப்டம்பர் 2026, 2:02 am IST
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே பைக் மீது மினி லாரி மோதியதில் மின்வாரிய கம்பியாளா்(வயா்மேன்) சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், வேம்பியைச் சோ்ந்தவா் தே.பாண்டியன் (47). இவா் வீரபாண்டியிலுள்ள தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக அலுவலகத்தில் கம்பியாளராக பணியாற்றி வந்தாா். சனிக்கிழமை அதிகாலையில் பணி முடிந்த பின்னா் பாண்டியன், தனது பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் சூரப்பட்டு பகுதியில் சென்றபோது, அங்கு திருவண்ணாமலை நோக்கிச் சென்ற மினி லாரி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த கெடாா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கெடாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மினி லாரியை ஓட்டி வந்த புதுச்சேரி மாநிலம், திருபுவனை விநாயகம்பட்டு அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த ரா.ராமரிடம் (36) விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments