FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

விஷாலுக்கு வில்லனாக நடிக்க வேண்டுமா ? - நீங்கள் செய்யவேண்டியது இதுதான்!

நடிகர் விஷாலின் புதிய படத்திற்காக நடிகர்கள் தேர்வு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. 

Updated On : 31 ஜூலை 2021, 11:52 am IST
பகிர்:

நடிகர் விஷாலின் புதிய படத்திற்காக நடிகர்கள் தேர்வு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. 

ஆர்யாவுடன் இணைந்து நடிகர் விஷால் நடித்துள்ள 'எனிமி' படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்க, ஆனந்த் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

இதனையடுத்து தற்போது இயக்குநர் து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். விஷால் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் சண்டைக் காட்சி ஒன்று சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

Advertisement

Advertisement

நடிகர்கள் ரமணா, நந்தா ஆகியோர் தயாரிப்பில் விஷால் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. விஷாலின் 32வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் தேவை என்ற விளம்பரம் வெளியாகியுள்ளது. 

அதில் ஆண்கள் - 25 வயது முதல்  30 வயது வரை, உயரம் - 5.8 முதல் 6.2 வரை வெள்ளை நிறத்தில் வில்லன் தோற்றத்தில் இருக்க வேண்டும். ஆண்கள் - வயது 25 முதல் 45 வரை, மாநிறத்தில் ரௌடி தோற்றத்தில் இருக்க வேண்டும். சிறுவன் - 6 முதல் 7 வயது வரை மாநிறமாக ஒல்லியான தோற்றத்தில், சராசரியான உயரத்தில் இருக்க வேண்டும்.

இளம் பெண் - 16 வயது முதல் 20 வயது வரை மாநிறமாக ஒல்லியான தோற்றத்தில் சராசரி உயரத்தில் இருக்க வேண்டும் . தமிழ்நாடு மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த நடிகர்களுக்கு முன்னுரைமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  

விருப்பமுள்ளவர்கள் வருகிற 15.8.2021 ஆம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டுரை இணைப்பை சுடுக்கி விண்ணப்பிக்கலாம் . 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments