‘பெண்கள் துர்கையம்மனின் உருவங்கள்’- நடிகைகளுக்கு ஆதரவளித்த திவ்யா!
தீபிகா படுகோன் ஆடை குறித்த சர்ச்சைக்கு நடிகை திவ்யா ஸ்பந்தனா கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை திவ்யா கன்னட படங்களிலும் தமிழ் படங்களிலும் நடித்து பிரபலமானவர். தமிழில் சிம்புவுடன் ‘குத்து’ படத்தில் அறிமுகமானவர். பொல்லாதவன், கிரி, வாரணம் ஆயிரம் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
தீபிகா படுகோன் ஷாருக்கான் நடித்த பதான் படத்திலிருந்து வெளியான பாடலில் காவி நிற ஆடை அணிந்திருப்பதால் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பல்வேறு பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனையொட்டி நடிகை ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
சமந்தா தனது விவாகரத்துக்காகவும், சாய்பல்லவி தனது கருத்தை கூறியதற்காகவும், ராஷ்மிகாவின் தனித்துவத்திற்காகவும், தீபிகா தனது ஆடைக்காகவும் மற்றும் சில பெண்கள் இப்படியாக பல காரணங்களுக்காக கேலி கிண்டலுக்கு உள்ளாகுகிறார்கள். எதைப் பேச வேண்டும், எதை செய்ய வேண்டும் என தீர்மானிப்பது எங்களது அடிப்படை சுதந்திரம். பெண்கள் கடவுள் துர்கா தேவியின் உருவங்கள். பெண் வெறுப்பு எனும் தீமைக்கு எதிராக போராட வேண்டும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.