கத்ரீனா ஃகைப் மற்றும் விக்கி கௌசலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
சமூக வலைதளம் வாயிலாக கத்ரீனா மற்றும் விக்கி கௌசல் தம்பதியினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கதை செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதளம் வாயிலாக கத்ரீனா மற்றும் விக்கி கௌசல் தம்பதியினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கதை செய்யப்பட்டுள்ளார்.
மும்பை சண்டாகிரஸ் காவல் நிலையத்தில் விக்கி கௌசல் மற்றும் கத்ரீனா ஆகியோர் மீது நபர் ஒருவர் சமூக வலைதளம் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் இளையராஜா
Advertisement
Advertisement
இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் மன்விந்தர் சிங் என்பவரை அடையாளம் கண்டுள்ளனர். அவரை விசாரித்ததில் இவர் கத்ரீனாவின் ரசிகர் என்பது தெரியவந்துள்ளது.
இவர் இன்ஸ்டாகிராமில் கத்ரீனாவை பின்தொடர்ந்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து மன்விந்தர் சிங் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.