முகப்பு
செய்திகள்

படப்பிடிப்புக்கு நடுவே மாணவர்கள் மத்தியில் பேசிய சிவகார்த்திகேயன்: ''சினிமாவில் நடிக்கிறது...''

படப்பிடிப்புக்கு நடுவே மாணவர்களுடன் சிவகார்த்திகேயன் பேசும் விடியோ வைரலாகி வருகிறது. 

Updated On : 4 மார்ச் 2022, 1:27 pm IST
பகிர்:


சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, புதுச்சேரி, லண்டன் போன்ற இடங்களில் நடைபெறவிருக்கிறது.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. அப்போது பள்ளி விழா ஒன்றில் சிவகார்த்திகேயன் மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.  

அப்போது பேசிய அவர், ''எல்லோருக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது. அதனை நீங்கள் முதலில் நம்பவேண்டும். நாமே நம்மை நம்பவில்லையென்றால், மற்றவர்கள் நம்மை நம்பவில்லை என சொல்வதில் அர்த்தம் இல்லை. 

எந்த திறமையாக வேண்டுமானாலும் இருக்கலாம். சினிமாவில் நடிக்கிறது மட்டும்தான் பெரிய விஷயம் இல்லை. அழகாக ஓவியம் வரைவது, நன்றாக பாடுவது, நம் மொழியை சிறப்பாக பேசுவது, எழுதுவது என திறமைகள் உங்களுக்குள் இருக்கிறது. அதனை சரியான நேரத்தில் தேடிக் கண்டுபிடித்துவிடுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments