ரஷியாவுக்கு எதிரான போரில் மக்களைக் காக்க சண்டையிட்ட உக்ரைன் நடிகர் மரணம்: சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
ரஷியாவுக்கு எதிரான போரில் சண்டையிட்ட உக்ரைன் நடிகர் மரணமடைந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் மக்களைப் பாதுகாக்கும் விதமாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 33 வயதான நடிகர் பஷா லீ என்பவர் ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷிய ராணுவ வீரர்களால் அவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
முன்னதாக கடந்த சனிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கடைசி பதிவில், ''கடந்த 48 மணி நேரத்தில் எங்கள் நாட்டில் எப்படி குண்டு வெடிக்கிறது என்பதை அமைதியாக உட்கார்ந்து புகைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதையும் படிக்க | பிரபல நடிகையின் துணிக்கடையில் தீ விபத்து: துணிகள் எரிந்து நாசம்
நாங்கள் சிரிப்பதற்கு, எங்களால் இதனை சமாளிக்க முடியும் என்பதே காரணம். உக்ரனை மக்களே நாங்கள் இருக்கிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார். அவர் இப்படி பதிவிட்டு அடுத்த நாளே ரஷியா ராணுவத்தினரால் கொல்லப்பட்டது மக்களிடையே பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.