ரஜினியிடம் வாழ்த்து பெற்ற ‘காந்தாரா’ ரிஷப் ஷெட்டி! (படங்கள்)
ஒருமுறை எங்களைப் புகழ்ந்தால் நூறு முறை உங்களைப் புகழ்வோம். நன்றி ரஜினி சார்.
கேஜிஎஃப் படத்தைத் தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் அடுத்ததாகத் தயாரித்து வெளியிட்ட காந்தாரா என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்று அதிக வசூலைப் பெற்றுள்ளது. ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய இந்தப் படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. இதுவரை ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
சமீபத்தில் காந்தாரா படத்தைப் பாராட்டி ட்வீட் வெளியிட்டார் ரஜினிகாந்த். தெரிந்ததை விடவும் தெரியாதது தான் அதிகம் என்பதை காந்தாரா படத்தை விடவும் வேறு யாரும் தெளிவாகச் சொல்லி விட முடியாது. எனக்குப் புல்லரித்தது ரிஷப் ஷெட்டி. கதை எழுதி, நடித்து இயக்கிய உங்களுக்குப் பாராட்டுகள். இந்தியத் திரையுலகின் மகத்தான படத்தை அளித்த படக்குழுவினருக்குப் பாராட்டுகள் என்றார்.
இந்நிலையில் ரஜினிகாந்தை அவருடைய இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் ரிஷப் ஷெட்டி. இதுபற்றி ட்விட்டரில் ரிஷப் ஷெட்டி கூறியதாவது: ஒருமுறை எங்களைப் புகழ்ந்தால் நூறு முறை உங்களைப் புகழ்வோம். நன்றி ரஜினி சார். எங்களுடைய காந்தாரா படத்தைப் பாராட்டியதற்கு என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்றார்.
Advertisement
Advertisement
Related Article
நடிகைகள் பார்வதி, நித்யா மேனன் கர்ப்பமா? அவர்கள் பகிர்ந்த புகைப்படத்திற்கான காரணம் என்ன?
ரசிகர் வரைந்த படத்தினை ட்விட்டரில் முகப்புப் படமாக மாற்றினார் நடிகர் விஜய்!
'நித்தம் ஒரு வானம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நேரடியாக மோதும் விஜய் & அஜித் படங்கள்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.